இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி காலமானார்.அண்ணாமலை இரங்கல்..!

இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி காலமானார். புற்று நோயால் பாதிக்கப்பட்டு பவதாரிணி இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

இசைஞானி இளையராஜவின் மகள் பவதாரிணி. கடந்த சில மாதங்களுக்கு முன்னால் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பவதாரிணி ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை சென்றார். இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வந்த பவதாரிணி, சிகிச்சை பலனிளிக்காமல் இன்று மாலை 5.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். பவதாரிணிக்கு வயது 47. பவதாரிணியின் உடல் நாளை சென்னைக்கு கொண்டு வரப்படும் எனக் கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் இளையராஜாவின் ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதேபோல், பவதாரிணி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவருடைய Twitter பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார். அவருடைய பதிவு பின்வருமாறு,

சிறந்த பின்னணிப் பாடகியும், இசையமைப்பாளரும், இசைஞானி இளையராஜா அவர்களது புதல்வியுமான பவதாரணி அவர்கள், உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி, மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

தனது தனிச் சிறப்பான குரலால், இதயத்தை நெகிழச் செய்யும் பல பாடல்களைப் பாடியவர் பவதாரணி. இளம் வயதிலேயே தேசிய விருது வென்ற பவதாரணி அவர்கள் இசையுலகில் பல சாதனைகள் படைப்பார் என்று அனைவரும் விரும்பியிருந்த போது, அவரது எதிர்பாராத மறைவு சற்றும் ஏற்க முடியாததாக இருக்கிறது.

பவதாரணி அவர்களைப் பிரிந்து வாடும் இசைஞானி இளையராஜா குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்தக் கடினமான நேரத்தில் அவர்களுக்கு இறைவன் துணையிருக்கட்டும்”.

ஓம் சாந்தி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *