திருநெல்வேலி மாநகரங்களில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள்
திருநெல்வேலி நாடாளுமன்றத்தை பொறுத்தவரையில் வெள்ளாளர் சமூகத்தைச் சார்ந்த வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் அது மட்டும் இன்றி தேவர் நாடார் கோனார் பள்ளர் சமுதாயம் போன்ற வாக்காளர்களும் கணிசமாக உள்ளனர்
இந்த நிலையில் திருநெல்வேலி நாடாளுமன்றத் தேர்தலில் நயினார் நாகேந்திரன் நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்தது ஆனால் திருநெல்வேலி நாடாளுமன்றத்தை பொருத்தவற்றில் சைவ வேளாளர்கள் அதிக அளவில் வாழ்ந்து வருவதாகவும் அவர்களுக்கு தான் வேட்பாளர் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வந்த நிலையில்
திருநெல்வேலியில் மாநில பொறுப்பு வைக்கக்கூடிய அன்னபூர்ணா பிள்ளை என்பவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று திருநெல்வேலி பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களும் நிர்வாகிகளும் போஸ்டர் மூலம் தங்களது கோரிக்கையை வைத்துள்ளனர்.
நைனார் நாகேந்திரன் ஏற்கனவே திருநெல்வேலி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருக்கும் நிலையில் பாரதிய ஜனதா கட்சி திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் எங்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை
இந்த முறை திருநெல்வேலி நாடாளுமன்ற வேட்பாளராக எங்கள் சமூக வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றும் வெள்ளாளர் சமூகத்தைச் சார்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.